கவிக்குயில்
அன்பு இதயங்களே வணக்கம்.

கவிக்குயில் தமிழ் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது...

இணையதளத்தில் இணைந்தமைக்கு நன்றியும், பாராட்டுகளும்,

தொடர்ந்து செந்தமிழ் வளர்ச்சிக்கு பதிவுகள் தந்து உதவுங்கள்..

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் நெஞ்சங்கள்!...




Join the forum, it's quick and easy

கவிக்குயில்
அன்பு இதயங்களே வணக்கம்.

கவிக்குயில் தமிழ் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது...

இணையதளத்தில் இணைந்தமைக்கு நன்றியும், பாராட்டுகளும்,

தொடர்ந்து செந்தமிழ் வளர்ச்சிக்கு பதிவுகள் தந்து உதவுங்கள்..

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் நெஞ்சங்கள்!...


கவிக்குயில்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
இனிய இதயங்களே!
தங்கள் கருத்துக்களை உலகத்தமிழர்களுடன் பகிர்ந்துக்கொள்ள வாருங்கள்..
கவிக்குயில் சோலை
அழகியபூமியை தரிசிக்க
பார்வையிட்டோர்


பல்லுயிர் சுழற்சிக்கு ஆபத்து

Go down

 பல்லுயிர் சுழற்சிக்கு ஆபத்து Empty பல்லுயிர் சுழற்சிக்கு ஆபத்து

Post by brightson Tue Nov 29, 2011 12:35 am

மரம், செடி, கொடிகளும், எண்ணிலடங்கா தாவர இனங்களும், பிராணிகளும், பறவைகளும், பூச்சிகளும், புழுக்களும், பூக்களும், புல் பூண்டுகளும், மனிதனின் ரசனைக் குரிய எழிலார்ந்த காட்சி பொருட்கள் மட்டுமல்ல. அவைகள் ஒவ்வொன்றும் மற்றொன்றின் உயிர் வாழ்விற்கு அடிப்படை தேவையாக அமைந்துள்ளன.

உதாரணமாக, புறா இனத்தை சேர்ந்த சுமார் 25 கிலோ எடை கொண்ட “டோடோ” என்னும் பறவைகளை மனிதர்கள் வேட்டையாடி, வயிறு புடைக்க தின்று, அந்த பறவை இனத்தையே முற்றிலுமாய் அழித்துவிட்டார்கள். அதன் காரணத்தால் காடுகளில் செழித்து வாழ்ந்திருந்த “கல்வாரியோ மேஜர்” என்னும் மர இனம் முழுவதும் மண்ணில் இருந்து அழிந்து விட்டது.

அந்த மரத்தின் கனிகளை புசித்து ஜீரணித்து, அதன் கொட்டைகளை தனது ஜீரண நீரினால் மிருதுவாக்கி அதை கழிவாக வெளியேற்றி மண்ணிலே போட்டு கொண்டு இருந்த “டோடோ’ பறவைகள் பூமியில் இல்லாமல் போன காரணத்தால், அந்த கல்வாரியோ மேஜர் மர இனமும் இல்லாமல் போய்விட்டது. அதன் வித்துக்கள் இயற்கையின் இயக்கத்தால் செயல்பட்டு, மண்ணிலே புதைந்து மறு உரு எடுத்து கனி தரும் மரங்களாக காட்சியளிக்க வழியில்லாமல் போய்விட்டது.

`பல்லுயிர் சுழற்சி’ என்னும் இயற்கையின் விதிமுறை இயக்கத்திற்கு இவ்வாறு ஏற்பட்டு வருகின்ற இடையூறுகளுக்கு மேற்கண்ட அழிவுகள் ஒரு அடையாளமாகும். மேலும் அதைப்போன்ற ஒரு சம்பவம் தான் சிட்டுக் குருவி இனத்தின் அழிவாகும். அதற்கு செல்போன் டவர்களில் இருந்து எழும்பும் “எலெக்ட்ரோ மேக்னட்” கதிர்வீச்சுகள் மட்டுமே காரணம் அல்ல. மனிதனின் உயிர் வாழ்விற்காக மண்ணில் விதைக்கப்படுகின்ற உணவு தானிய விதைகளின் அணுக்கரு மாற்ற செயல் திட்டங்களின் எதிர் விளைவுகளாலும் அந்த பல்லுயிர் சுழற்சிக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது.

இந்த காலத்தில் அப்படிப்பட்ட விஞ்ஞான தொழில் நுட்பங்களை கொண்டு உற்பத்தி செய்யப்படுகிற விதைகளை கொண்டு விவசாயம் செய்து பெறப்படுகின்ற தானியங்கள், மனிதனுக்கு மட்டுமின்றி சிட்டுக்குருவிகளுக்கும் உணவாகின்றன. அப்படிப்பட்ட விஞ்ஞான தொழில் நுட்பத்தின் எதிர்விளைவுகளை ஒரு வேளை, மனிதனால் ஏற்றுக்கொள்ள முடியும் என்று வைத்துக்கொள்வோம். அதேபோல் சிட்டுக்குருவிகளும், தேனீக்களும் அதை ஏற்றுக்கொள்ளும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்களா? அப்படி கணக்கு போட்டால் அது, தப்புக்கணக்கு ஆகி விடுமல்லவா? அந்த எதிர்பார்ப்பு, இலவு காத்த கிளியின் கதைக்கு ஒப்பாகி விடும்.

“பல்லுயிர் சுழற்சி” என்ற இயற்கையின் விதிமுறையில் புல்லுக்கும் கூட முக்கிய பங்கு உண்டு. அப்படியிருக்க, அந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில் சிட்டுக்குருவி இனம் அழிவதை யாரும் அலட்சியம் செய்யக்கூடாது. விஞ்ஞானிகள் கூடி விவாதித்து, போர்க்கால நடவடிக்கையை மேற்கொண்டு அந்த அழிவை தடுத்திடவேண்டும். அத்தகைய அழிவுகளுக்கு எதிராக அறிவாயுத யுத்தம் செய்திட அணி திரளவேண்டியதும் அவசியமானதாகும். அதைப்போலவே, கதிர்வீச்சின் தாக்குதலை எதிர்த்து நிற்க இயலாத தேனீக்களுக்கு ஆதரவாகவும் பாதுகாப்பு படை அமைக்கப்படவேண்டும்.
brightson
brightson
தோழர்
தோழர்

பதிவுகள் : 128
Points : 414
இணைந்தநாள் : 01/04/2011
வயது : 39
சொந்தஊர் : தமிழ்நாடு - இந்தியா

http://www.kavikuyil.yolasite.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum